10th September 2021 18:30:26 Hours
தேசிய தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒருங்கிணைப்புடன் கிளிநொச்சியில் 57 வது படைப்பிரிவு சிப்பாய்களால் 30 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாவது தொகுதி தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான மாவட்டம் முழுவதும் ஒன்பது தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 57 ஆவது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களினால் மேற்பார்வை செய்யப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினால் நடமாடும் தடுப்பூசி சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.