Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2021 17:54:25 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சேன வடுகே கடமைகளை பொறுப்பேற்றார்

கொஸ்கமவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையின் 46 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சேன வடுகே அவர்கள் வியாழக்கிழமை (09) இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதற்கமைய புதிய தளபதிக்கு படைப்பிரிவு வளாகத்தின் நுழைவாயிலில் கெமுனு ஹேவா படையினரால் வழங்கப்பட்ட காவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து பதவியேற்புக்கான கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது புதிய தளபதி இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் பிஎன் கிறிஸ்டி ஜயசிங்க மற்றும் தலைமைய பொதுப்பணி அதிகாரி பிரிகேடியர் கொடல்லவத்த உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

அதனையடுத்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் சுப வேளையில் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்பதற்கான ஆவனங்களில் கையொப்பமிட்டார். அதனையடுத்து பதவியேற்பின் நினைவாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்கவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட சிப்பாய்களுக்கு மத்தியில் தளபதி உரை நிகழ்த்தியபோது, தனது பதவிக் காலத்தில் தன்னால் முடிந்த வரையில் தலைமையகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் உயிர சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.