Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th January 2021 22:30:32 Hours

இராணுவத் தளபதி புதிய பதவி நிலைப் பிரதானிக்கு வாழ்த்து

இன்று பிற்பகல் (18) பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாராவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இதன்போது ஜெனரல் சவேந்திர சில்வா தனது புதிய அலுவலக சிரேஸ்ட அதிகாரியை வாழ்த்தியதுடன் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். மேலும் அவர் தலைமையக விடுதி, படையினர் நலன்புரி, வாழ்க்கைத் தரம் மற்றும் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடினர். தேவையான நிர்வாக குழுக்களை மிக அவசியமானதாக கருதி வாராந்தம் கூடி ஆராய்ந்து தேவைகளை விரைவுபடுத்த ஆலோசிக்கப்பட்டது.

இராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளுக்கும் சமமான கவனிப்பை வழங்கும் வகையில் புதிய பதவு நிலை பிரதானி தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதுடன் நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க பொறுப்பாக இருந்தல் வேண்டும் என இராணுவத் தலைவர் விரும்பினார். அதேபோல் ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார், நாட்டின் அதிக நன்மைக்காக ஜனாதிபதி சுபீட்சத்தின் நோக்குக்கு ஏற்ப இருக்க வேண்டும்என கேட்டுக்கொண்டார்.

கொவிட் 19 தொற்றுநோயைத் தொடர்ந்து அனைத்து நிலைகளின் சுகாதார பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை விரிவாகக் கூறிய ஜெனரல் ஷவேந்திர சில்வா, தலைமையகத்தில் சேவை செய்யும் அனைத்து படையினரின் பாதுகாப்பு மற்றும் தடுப்பை வழங்குவதற்காக அதிகபட்ச சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க புதிய பதவி நிலை பிரதானிக்கு அறிவுறுத்தினார்.

மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தனது தளபதியின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளுக்காக தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இராணுவத்தில் உள்ள அனைத்து படையினருக்குமான நலனுக்கான இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை அடைவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளித்தார். சந்திப்பின் முடிவில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவ பதவி நிலை பிரதானிக்கான நியமனக் கடிதம் மற்றும் நினைவு பரிசை வழங்கினார். Running sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD