Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2020 17:00:37 Hours

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 487 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் -நொப்கோ தெரிவிப்பு

இன்று (29) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 487 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டம், 78 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 15 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (29) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,447 பேர் ஆகும். அவற்றில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை மீன் சந்தையின் கொத்தணியில் 16,388 பேரும் உள்ளடங்குவர். அவர்களில் மொத்தம் 13,223 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் நேற்று 28 ஆம் திகதி வரை மரணமானவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,988 ஆகும். அவர்களில் 16,655 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 6,224 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (29) (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 430 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 109 ஆகும். நேற்று இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 02 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 08, மற்றும் கொழும்பு 10, ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று (29) காலை மாலைதீவில் இருந்து UL 104 விமானம் ஊடாக 69 பயணிகளும், தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 45 பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமான ஊடாக 04 பயணிகளும், இந்தியாவில் இருந்து 6E 9034 விமான ஊடாக 04 பயணிகளும் மற்றும் துபாயிலிருந்து UL 226 விமான மூலம் 292 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (29) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 53 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,279 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 28 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 11,936 ஆகும். Running Sneakers Store | nike fashion