Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2020 15:08:51 Hours

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய உதவி பாதுகாப்பு இணைப்பு அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய உதவி பாதுகாப்பு இணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் புனீட் சுசில் அவர்கள் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கெப்டன் விகஸ் சூத் அவர்களுடன் இணைந்து (16) காலை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியும் மற்றும் நொப்கோ தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் உள்ள இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

கெப்டன் விகாஸ் சூத் அவர்கள் உள்வரும் புதிய உதவி பாதுகாப்பு இணைப்பு அதிகாரி அவர்களை லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர அவர்களுக்கு சில்வா அவர்களிடம் அறிமுகப்படுத்தியதோடு அவரின் முந்தைய சேவை பணிகள் குறித்து திவபடுத்தினார், மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர விடயங்கள் குறித்தும் உரையாடப்பட்டன.

மேலும் நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடையாளங்களாக நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

அவர்கள் புறப்படுவதற்கு முன்னர், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வருகை கெப்டன் விகாஸ் சூத் அவர்கள் நோக்போவின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் இலங்கையில் கொவிட் -19 இன் நிலை குறித்து விசாரித்தார். Asics footwear | Nike SB