29th September 2020 12:00:26 Hours
இராணுவ சேவா வனிதா பிரிவின் ஒருங்கிணைப்புடன் ராஜகிரியவில் உள்ள பிரிமா பேக்கரி பயிற்சி மையத்தினால் 40 இராணுவ வீரர்களுக்கான பேக்கரி பாடநெறியானது வெள்ளிக்கிழமை (25) நட்டாத்தப்பட்டது.மேலும் பாடநெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த பாடத்திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு கேக், பேஸ்ட்ரி மற்றும் பிற சிற்றுண்டி தயாரிப்புகள் தொடர்பாக விளக்கப்பட்டது.
இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சனின் ஒருங்கிணைப்பில் குறித்த படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்டது.
இறுதி விருது வழங்கும் விழாவில் பிபிடிசி தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜயோங், இராணுவ சேவா வனிதா பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் சுமேதா பாலசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர். latest Nike release | Patike