25th September 2020 17:25:40 Hours
இராணுவ தலைமையகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட “துருலிய வெனு வென் அபி” எனும் மர நடுகை திட்டத்திற்கு இணையாக, 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அப் படையினரால் செவ்வாய்க்கிழமை (22) ஆம் திகதி வடக்கில் அமைந்துள்ள கல்லாறு வில்பத்து வளாகத்தில் அரிய மர இனங்கள் மற்றும் மருத்துவ மதிப்புள்ள 325 மரக்கன்றுகளான மீ, கோஹோம்பா, புளி, காயா, கெடகலா, மைலா, கும்புக் ஆகிய மரக்கன்றுகளை நாட்டினர்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜெயசிங்க அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திராஜித் பண்டார அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, 542 ஆவது காலாட்படைத் தளபதி , 8ஆவது பட்டாலியன் மற்றும் விஜயபாகு காலாட்படை படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Running sports | Zapatillas de running Nike - Mujer