Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2020 17:35:40 Hours

ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் ரந்துள ஹத்தனகொட அவர்களுக்கு படையினரால் வரவேற்பு மரியாதை

64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் முன்னாள் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னகொட அவர்களுக்கு அம்பேபுஸ்ஸயில் அமைந்துள்ள இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு (20) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதிக்கு படையணி தலைமையகத்தில் வைத்து படையினரால் நுழைவாயிற் மரியாதை மற்றும் அணிவகுப்பு வரவேற்பு மரியாதையும் வழங்கப்பட்டன. பின்னர் அவர் ‘டிரஞ்சன்’ விடுதிக்கு அருகில் வைத்து இலங்கை சிங்க படையணியின் பிரதி மத்திய தளபதி கேர்ணல் துலித் பெரேரா அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர், இலங்கை சிங்க படையணியின் மத்திய படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக திசாநாயக்க அவர்களால் அணிவகுப்பு மைதானத்தில் வைத்து வரவேற்கப்பட்டார். ஓய்வு பெறும் அதிகாரி இலங்கை சிங்க படையணி படையினருக்கு உரையாற்றியதுடன் அவரது கடந்தகால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் மற்றும் படையணியின் பெயரைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படை வீர்ர்களுடன் இணைந்து உயிர் நீத்த இலங்கை சிங்க படையணியின் போர் வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும்,வொரன்ட் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்ஸ் உணவகத்தில் அனைவராலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னகொட மற்றும் திருமதி ஆஷா மனோஹரி விஜரத்ன ஆகியோருக்கு படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் துணைவியர்களினால் இரவு விருந்துணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னகொட அவர்கள் படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த போது இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 61 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோர்களால் வரவேற்கப்பட்டார். Running sport media | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ