29th September 2020 00:25:43 Hours
இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்கள் இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் 18 ஆவது படைத் தளபதியாக (28) ஆம் திகதி திங்கட்கிழமை குருநாகல ஹெரலியவலயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதியபடைத் தளபதிக்கு படைத் தலைமையக வளாகத்தில் இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் நுழைவாயிற் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் தேசிய பாதுகாப்பு படையணியின் மத்திய படைத் தளபதி அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியில் உள்ள மரணித்தபோர் வீரர்களின் நினைவு தூபிக்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையெப்பமிட்டு புதிய நியமனத்தை ஏற்றுக் கொண்டார்.
மேஜர் ஜெனரல் ஜெயசாந்த கமகே அவர்கள் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து படைத் தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நட்டார். பின்னர் அனைத்து படையினர் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் அவர் அனைத்து படை வீர்ர்களுடன் இணைந்து தேநீர் விருந்துபசாரத்தலும் கலந்துகொண்டார். best Running shoes brand | Nike Running