25th September 2020 17:38:40 Hours
54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவழுக்கு அமைய, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள 543 ஆவது படைப் பிரிவின் 7 ஆவது விஜயபாகு கலாட் படையணியின் படையினர் இன்று (26) ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் மன்னார் தவல்பாடு கடற்கரையில் வைத்து கேரள கஞ்சா 48 கிலோவுடன் சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி கடந்த சில நாட்களில் மன்னார் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து போதைப்பொருள், மஞ்சள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. buy footwear | Nike Shoes