Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2020 08:00:38 Hours

231 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியாக கடமைப் பொறுப்பேற்பு

231 ஆவது பாதுகாப்பு படைப் தலைமையகத்தின் 6 ஆவது படைத் தளபதியாக கேர்ணல் பிரதீப் கமகே அவர்கள் மத அனுஷ்டானம் மற்றும் சம்பிரதாய முறைப்படி (22) ஆம் திகதி செவ்வாய்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 231 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியவர்கள் பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு,4 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டார். சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் 'செத் பிரித்' மத அனுஷ்டானத்துக்கு மத்தியில் உத்தியோக பூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு தனது நியமனத்தை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் மரக்கன்று உன்றினை நட்டார். பின்னர் அவர் படைப்பிரிவில் உள்ள அனைத்து படையினர் மத்தியிலும் உரையாற்றியதோடு,அவர் தனது வேளைத்திட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

அன்றைய நாள் நிகழ்வின் இறுதியாக அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது.கட்டளை அதிகாரிகள், 231 ஆவது படைப்பிரிவின் பதவிநிலை அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Best Sneakers | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov