Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2020 16:07:38 Hours

கிளிநொச்சி பீடத்தின் வளாக பற்றைக் காடு சுத்தமாக்கும் பணிகள்

ஜூலை மாதம் கிளிநொச்சி அரிவியல் நகரத்தில் யாணை தாக்குதலில் இலக்காகி ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கே. கந்தசாமி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களிடம் கிளிநொச்சி வளாகத்தை சுத்தம் செய்வதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து 09வது கள பொறியியலாளர் படையின் படையினரால் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந் நடவடிக்கையாக 2020 ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி முதல் 23ம் திகதி வரை பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியுள்ள நிலப்பரப்பை சுத்தம் செய்வதற்காக இராணுவம் இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தை வழங்கியதுடன பல்கலைக்கழக ஊழியர்கள் , மாணவர்கள் மற்றும் இராணுவ வீரர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டமாக நடாத்தப்பட்டது. இதன் ஊடாக சூழவுள்ள பொதுமக்களும் பயனடைந்தனர்.

செயற்றிட்டத்தின் இறுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராணுவ உதவியை மிகவும் பாராட்டிய தோடு தனது நன்றியினை தெரிவித்தார். trace affiliate link | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ