Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2020 12:50:26 Hours

22 ஆவது படைப் பிரிவு படையினரால் டெங்கு ஒழிப்பு பணிகள்

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு இணையாக, 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (13) ஆம் திகதி திருகோணமலையில் உள்ள புனித அந்தோனி தேவாலய வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டமானது 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக வீரசூரிய அவர்களால் தொடங்கப்பட்டதுடன் 221 அவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பியந்த காரியவசம் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டன.

கஜபா படையணியின் 2 ஆவது தொண்டர் பட்டாலியனின் படையினரால் சுற்றுப்புறம் உட்பட முழு தேவாலய வளாகமும் சுத்தம் செய்து நுளம்பு பரவும் இடங்களை அழிக்கப்பட்டன. Running sports | Releases Nike Shoes