Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st September 2020 16:10:43 Hours

இலங்கையின் சிலோன் ஹோட்டல் பட்டதாரிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் இராணுவ தளபதியின் சிறப்பு விரிவுரை

இலங்கையின் சிலோன் ஹோட்டல் பட்டதாரிகள் சங்கத்தினரின் 49 ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் சனிக்கிழமை (19) மாலை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதில் சிறப்புரையாற்ற பாதுகாப்புப் தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியும், கொவிட் -19 தேசிய தடுப்பு நடவடிக்கை மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.

சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு எஸ்.ஹெட்டியராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஹோட்டல் தொழில் வல்லுநர்கள் ஒரு பெரிய கூட்டம் கலந்து கொண்டனர், அங்கு இலங்கை சுற்றுலாவின் தலைவரான திருமதி கிமாலி பெர்னாண்டோவின் அழைப்பின் பேரில் இராணுவ தளபதி 'கொவிட் -19 தொற்று நோயை அடுத்து சுற்றுலா வாய்ப்புகள்' தொடர்பாக பேசினார். நாட்டிற்கு சாதகமாக இருந்தது, இலங்கையை சிறப்பானதாக்குவது மற்றும் எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் தொடர்பாக விரிவுரைத்தார்.

நீண்டகாலமான போர், சுனாமி, சோகம் மற்றும் சமீபத்தில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலால் இலங்கை சுற்றுலா பாதிக்கப்பட்டுள்தையும் குறைபாடுகளையும் அவர் கோடிட்டுக் காட்டினார். உரையின் போது, இப்போது நடைமுறையில் உள்ள புத்துயிர் பெற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொவிட் -19 க்கு எதிரான போராட்டம் மற்றும் முதல் நாளிலிருந்து நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக சுட்டிக்காட்டினார். இலங்கையில் வைரஸ் தாக்கத்தின் முதல் சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர் அவர்களுக்கு நினைவுபடுத்தினார், ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் ஹோட்டல்களை தனிமைப்படுத்தல் மையங்களாகப் பயன்படுத்த உதவியைப் பெற்றனர். affiliate tracking url | Nike Air Max 97 GS Easter Egg 921826-016 , Fitforhealth