Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2020 14:17:49 Hours

இதுவரை 42,980 நபர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு கொவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை (19) ஆம் திகதி அறிக்கையின் படி 05 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஓமானில் இருந்து வருகை தந்து கிரகம தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், இந்தியாவில் இருந்து வருகை தந்து ஹொட்டல் ஜெட்வின் பீச் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், பாகாரைன் இருந்து வருகை தந்து நீர்கொழும்பு கெரோலினா பீச் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், ஹொங் ஹோங் இருந்து வருகை தந்து ஜெட்விங் ப்ளு ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும் மற்றும் லிபியாவில் இருந்து வருகை தந்து நீர்கொழும்பு கெரோலினா பீச் தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும், தனிமைபடுத்தப்பட்டுள்ளன என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (19) காலை 6.00 மணி வரை கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 649 ஆகும். அவர்கள் 528 நபர்கள் மறுவாழ் கைதிகள், 67 ஊழியர்கள், 5 விருந்தினர் ஊழியர்கள், 48 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் ஆவர்.

அபுதாபியில் இருந்து EY 264 விமான மூலம் 09 பயணிகளும், தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானத்தின் மூலம் 67 பயணிகளும் இலங்கை வந்துள்ளன. அதேபோல் சவுதி அரேபியாவில் இருந்து UL 226 விமான மூலம் 13 பயணிகளும் கட்டாரிலிருந்து UL 208 விமானத்தில் 02 பயணிகளும், (19) ஆம் திகதி இன்று இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

இன்றைய தினம் (19) பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு 281 நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களான ருவல கல்பிட்டயவில் ஒருவரும், நிபுன பூஸ்ஸா தனிமைபடுத்தல் நிலையத்தில் 13 பேரும், ஒழுவில் தனிமைபடுத்தல் நிலையத்தில் 06 பேரும், கஹாகொள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் 115 பேரும் ஹோட்டல் ஜெட்வின் புளு 03 பேரும், ஹோட்டல் ஜெட்வின் சீ 24 பேரும், சீகிரிய கிராமத்தில் 21 பேரும், ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தல் நிலையத்தில் 16 பேரும் மற்றும் இராணுவ பொதுசேவைப் படையணி தனிமைபடுத்தல் நிலையத்தில் 82 பேரும் தனிமைபடுத்தலின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

அதேபோல், இன்று 19 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் , 42,980 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 62 தனிமைப்படுத்தல் மையங்களில் 6172 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று வரைக்கும் (18) நாடாளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1760 ஆகும். இதுவரை நாடாளவியல் ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 264,343.ஆகும்.

இதற்கிடையில், முழுவதும் குணமடைந்த 17 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (19) அதிகாலையில் மருத்துவமனைகளை விட்டு வெளியேறின. அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அதன்படி, கந்தகாட்டில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய 638 நபர்கள் மீட்கப்பட்ட பின்னர் இதுவரை வெளியேறிவிட்டனர். புனர்வாழ்வு மையத்துடன் இணைக்கப்பட்ட மொத்தம் 11 பாதிக்கப்பட்ட நபர்கள் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களைத் தவிர வேறு எந்த சாதகமான சம்பவங்களும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை என்பதால், அனைத்து இலங்கையர்களும் தங்கள் சுகாதார நடைமுறைகளைத் தொடரவும், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அதன் பரவலைத் தடுக்கவும் உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நிறைவு) Sports News | Sneakers