11th September 2020 14:32:26 Hours
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் இராணுவ மகளிர் படையணியின் 20 ஆவது படைத் தளபதியாக பொறல்லையிலுள்ள தலைமையகத்தில் இம் மாதம் (8) ஆம் திகதி பதவியேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதி அவர்களை மகளிர் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் ஜானக ரத்னாயக அவர்கள் வரவேற்று பின்னர் தளபதி அவர்களுக்கு இராணுவ மரயாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
மகா சங்க சபாவின் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு பணிமனையில் புதிய படைத் தளபதி அவர்கள் தனது ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்பு தலைமையகத்திலுள்ள இராணுவ மகளிர் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார். இதன் போது கட்டிட நிர்மான பணிகள் மற்றும் முன்னேற்ற வேலைத் திட்டங்களை பற்றி வலியுறுத்தினார்.
மேஜர்ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் ஓய்வு பெற்று சென்றதன் நிமித்தம் இவர் புதிய மகளிர் படையணியின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். Authentic Nike Sneakers | New Releases Nike