Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2020 08:14:29 Hours

பதவியுயர்த்தப்பட்ட விஷேட படையணியைச் சேர்ந்த இரு உயரதிகாரிகளுக்கு கௌரவ மரியாதைகள்

மாத்தளை நாவுளையில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையகத்தில் புதிதாய் பதவியுயர்த்தப்பட்ட விஷேட படையணியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா போன்ற அதிகாரிகளுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணி வகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

விஷேட படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த மூத்த அதிகாரிகள் இருவருக்கும் படையினரால் இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டு பின்னர் இருவரும் தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினர் நிமித்தம் கௌரவ அஞ்சலிகளை செலுத்தி பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளையும் மேற்கொண்டனர்.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த மூத்த அதிகாரிகளை விஷேட படையணியின் மத்திய கட்டளை தளபதி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார். பின்னர் பதவியுயர்த்தப்பட்ட படை அதிகாரிகளினால் தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் உரை நிகழ்த்தின பின்னர் அன்றிரவு ஒழுங்குசெய்யப்பட்ட இரவு விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

இந்த மூத்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் இராணுவ தலைமையகத்தில் நடவடிக்கை பணிப்பாளர் நாயகமாகவும், மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா அவர்கள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike footwear | M2k Tekno