Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th July 2020 21:51:20 Hours

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புத்தளத்தில் நிவாரண தொகை வழங்கல்

58 வது படைப்பிரிவினரால் புத்தளம் நெலும்வெவ மற்றும் கொன்வெவ கிராமங்களின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் முன்பள்ளி பிள்ளைகள் மற்றும் மாணவர்களிடையே கல்வி மீதான அக்கறையை மேம்படுத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பாடசாலை உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளித்தல் 2020 ஜூன் மாதம் 27ம் திகதி ஓமான் எயார் லைன்ஸ் மற்றும் விஷன் கெயார் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் நிதியுதவியுடன் மேற் கொள்ளப்பட்டது.

அதன்படி, 5 முன்பள்ளிகளின் 32 முன்பள்ளி மாணவர்களுக்கு உடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களும், 15 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளும், 10 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களும் இத் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.

ஓமன் எயார் லைன்ஸின் திரு சாகர வீரசிங்க மற்றும் விஷன் கெயார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செல்வி திலங்கா சில்வா ஆகியோர் 58வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர்.

புத்தளம் சின்கவில்லுவத்தை 58 வது படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு நன்கொடைத் திட்டம் பயனாளி மாணவர்களின் நடன நிகழ்வுகளால் வண்ணமயமானது. jordan Sneakers | Women's Sneakers