Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2020 12:06:32 Hours

புதிய பதவி நிலை பிரதானிக்கு இலங்கை பொறியியலாளர் சேவைப் படையணி தலைமையகத்தில் கெளரவ மரியாதை

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும், இலங்கை பொறியியலாளர் சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் இராணுவத்தில் 55 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக தனது கடமையை பொறுப்பேற்றதன் பின்னர், பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை பொறியியலாளர் படையணி தலைமையகத்திற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை புதன்கிழமை (1) ஆம் திகதி மேற்கொண்டார். இத் தலைமையகத்திற்கு வருகை தந்த பதவி நிலை பிரதானிக்கு வரவேற்பு கெளரவ மரியாதை வழங்கப்பட்டது.

இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதம அதிதியை இலங்கை பொறியியலாளர் படையணி தலைமையகத்தின் மத்திய படைத் தளபதி பிரிகேடியர் எம் மாயதுன்ன அவர்கள் வரவேற்றார், பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் நுழைவாயிலில் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் மரணித்த போர் வீரர்கள் நினைவு தூபிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் ஒரு மலர் மாலை அணிவித்து, மரியாதை அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அணிவகுப்பு தளபதியின் அழைப்பை ஏற்று மரியாதை அணிவகுப்பில் மறுபரிசீலனை மற்றும் சிறப்பு அதிதிகளிடம் கெளரவ மரியாதையைப் பெற்றுக்கொண்ட அவருக்கு படையினரால் அணிவகுப்பு கெளரவ மரியாதை வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து லெப்டினன்ட் ஜெனரல் அன்கம்மன நினைவு மண்டபத்தில் வைத்து பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் படையினருக்கு உரையாற்றியபோது, படையணிகளின் கொடியை உயரமாக பறக்கவைக்க அனைத்து அணிகளும் சிறந்த தலைமைத்துவத்தையும் ஒழுக்கமான குணங்களையும் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகள் மற்றும் படையினரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சொற்பொலிவாற்றினார். latest jordans | Jordan Ανδρικά • Summer SALE έως -50%