Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2020 19:46:31 Hours

இராணுவ தளபதிக்கு எதிரியின் போராட்டத்தை கௌரவித்து வாழ்த்துக்கள்

நுவரெலியவிலுள்ள கிரான்ட் ஹோட்டலில் மேலாண்மை மற்றும் பணியாளர்கள் எலிசபெது கால மாளிகையில் இசைக்கலைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு கோவிட் தொற்று நோய்க்கு எதிராக இராணுவத்தினரது அர்ப்பணிப்பு சேவையை பாராட்டி வரவேற்பு நிகழ்வு இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.

கிரான்ட் ஹோட்டலின் பொது முகாமையாளர் திரு.எம் ரிபான் இராணுவ தளபதிக்கு விடுத்த அழைப்பானையின் பேரில் இராணுவ தளபதி அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிக்கொண்டார். இதன் போது ஹோட்டலில் இராணுவ தளபதியின் புகைப்படங்கள் தொங்கவிட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

இந்த ஹோட்டலுக்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை ஹோட்டல் நிர்வாகம் வரவேற்று இராணுவ தளபதியவர்கள் கேக் வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். பின்னர் இசைக்கலைஞர்கள் இராணுவ தளபதியை கௌரவிக்கும் முகமாக இசை நிகழ்ச்சிகளை முன்வைத்தனர். அத்துடன் இளைஞர்கள் தேசிய கொடியை சைத்து அசைத்து தங்களது கௌரவத்தையும் இராணுவ தளபதிக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்கி வைத்தனர். இராணுவத்தினர் கோவிட் – 19 எதிர்ப்பு தடுப்பு பணிகளில் ஆற்றிய சேவையை பாராட்டும் பொருட்டு இராணுவ தளபதிக்கு இந்த நிகழ்வின் மூலம் பாராட்டுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வின் இறுதியில் இராணுவ தளபதி மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sneakers | Mens Flynit Trainers