11th June 2020 14:05:24 Hours
பொறியியல் படையணியைச் சேர்ந்த கிழக்கு பாதுகாப்பு முன்னரங்க படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் புவனிக ரந்தெனிய அவர்கள் நீண்ட காலம் இராணுவத்தில் சேவையாற்றிய பின்பு ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இன்று (11) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
இராணுவ தளபதியின் பணிமனைக்கு சென்ற இந்த மூத்த அதிகாரியை இராணுவ தளபதியவர்கள் வரவேற்று இவருடன் சில நேரம் உரையாடி இவர் இராணுவத்தில் ஆற்றிய சேவையை கௌரவித்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இச்சந்திப்பின் இறுதியில் இராணுவ தளபதி மற்றும் இந்த மூத்த அதிகாரிக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. best Running shoes | jordan Release Dates