21st May 2020 07:30:24 Hours
கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சஜாத் அலி அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சஜாத் அலி அவர்கள் இருநாடுகளுக்கு இடையில் பல ஆண்டு காலமாக நிலவி வரும் நட்பு உறவு முறைகளை கௌரவித்து இராணுவ தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இலங்கை இராணுவம் மற்றும் முப்படையினருக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவிகளை வழங்குவதாக இராணுவ தளபதிக்கு மேலும் தெரிவித்தார். இத்தருணத்தில் இராணுவ தளபதி அவர்கள் எமது அண்டைய நாடான பாகிஸ்தானிலுள்ள இராணுவத்தினர் எமக்கான தளவாட தேவைகளை வழங்கி எமக்கு உதவியுள்ளமைக்கு நன்றிகளை இவருக்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes | Nike Shoes