Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2020 21:00:05 Hours

இராணுவ இசை குழுவினரால் இன்று (5)ஆம் திகதி கொழும்பு 5, ஹேவ்லாக் நகரத்தில் இசை நிகழ்ச்சி

தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மன நிதானத்தை அளிக்கும் நோக்கமாக, கோவிட்-19 எதிரபாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமன லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ் இராணுவ இசை குழுவினர், இன்று (5)ஆம் திகதி கொழும்பு 5, ஹேவ்லாக் நகரத்தில் உள்ள ஹேவ்லாக் நகர குடியிருப்புகளைச் சுற்றி ஒரு மொபைல் இன்னிசை நிகழ்வினை நடத்தினர்.

பாடகர்களான பத்திய, சந்தோஷ் மற்றும் உமரியா சின்ஹவன்ச ஆகியோரும் இராணுவக் குழுவில் சேர்ந்து தங்களின் பிரபலமான திறமைகளை வெளிப்படுத்தினர். லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அந்த இடத்திற்கு அறிவிக்கப்படாமல் வந்து ஏற்பாட்டை ஊக்குவித்தார். இந்த முக்கியமான நேரத்தில் அவர்களை மகிழ்விப்பதற்காக அங்கு இருந்த கலைஞர்களை நோக்கி நோக்கி பொதுமக்கள் தங்கள் பல்கனிகளில் இருந்து தேசியக் கொடிகளுடன் கைகளை அசைத்து கைதட்டினர் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மற்ற இடங்களில் சரியான நேரத்தில் இந்த இன்னிசை தொடரும்.Sports brands | Nike Dunk - Collection - Sb-roscoff