Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2020 18:40:23 Hours

கிளிநொச்சியில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தாருக்கு இராணுவத்தினரால் உதவிகள்

கிளிநொச்சியிலுள்ள கச்குவாரி, புடியகொலேன், பன்னிகாகுளம் மற்றும் ஓலமடு பிரதேசங்களில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு 57 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 574 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் (26) நாட்டில் நிலவும் கொவிட் – 19 நோய் தாக்கம் நிமித்தம் ஊரங்கு சட்டத்தினால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகமளிப்பதை அவதானித்து சமையல் உணவு பொதிகள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் இப்பகுதிகளில், பொது முகவரி முறை மூலம் பொது மக்களுக்கு சுகாதார நடைமுறைகள் மற்றும் போதுமான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டும் விழிப்புணர்வு அறிவிப்பு நடவடிக்கைகள் 571 மற்றும் 572 படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.பி.எஸ் டி சில்வா அவர்களது பரிந்துரைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.affiliate link trace | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD