31st March 2020 14:37:45 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் கடந்த மார்ச் மாதம் திங்கட் கிழமை (30) ஆம் திகதிஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் கவலைகள் குறித்து விசாரிக்கும் நோக்கத்துடன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள பொது வியாபார நிலையங்களுக்கு சென்று நிலைமைகள் தொடர்பாக பார்வையிட்டார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியின் இந்த விஜயத்தின் போது, வியாபார நிலையங்கள், சுகாதார மருத்துவ விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். அத்துடன் 68, 682 ஆவது படைத் தலைமையகங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பணிந்துரைப்பும் விடுத்தார்.Nike sneakers | Jordan Shoes Sale UK