Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2020 22:50:24 Hours

பொதுமக்கள் & கடை உரிமையாளர்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்- பாதுகாப்பு தலைமை பிரதானி தெரிவிப்பு

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (29) ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிட்ட விஷேட ஒலிப்பதிவில்,திங்களன்று 30 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்தப்படும் வேளை, பொது மக்கள்,வாடிக்கையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தங்களுக்கிடையிலான சமூக இடைவெளி மற்றும் ஏனைய சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

"கடை உரிமையாளர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் உணவு வகைகளையும் சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் ஒரு குறிப்பிட்ட ஒரு மோல் அல்லது கடைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மற்ற உணவுக் கடைகளையும் சில்லறை கடைகளையும் பயன்படுத்தலாம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட காலகட்டத்தில் இந்த வழிகாட்டுதல்களை நீங்கள் கண்டிப்பாக பின்பற்றாவிட்டால் இந்த கொடிய தொற்றுநோய் பீடிக்கும் ஆபத்தை நீங்கள் எதிர்நோக்குவீர்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உங்கள் சொந்த நலனுக்காகவே இருப்பதால், இந்த சுகாதார நெருக்கடியின் முக்கியமான தருனத்தில் மக்கள் நிதானமாகவும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். ஒலிப்பதிவு பின்வருமாறு Nike sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ