Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th March 2020 20:36:14 Hours

நாகதீப மற்றும் கிளிநொச்சி லும்பினி விகாரையில் பௌத்த வழிப்பாடுகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் ஒத்துழைப்புடன் யாழ் குடா நாட்டில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரையில் கடந்த 07 ஆம் திகதி சனிக்கிழமை பிரித் பௌத்த மத வழிப்பாடுகள் இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து இலங்கை முழுவதும் உள்ள மக்களை ஆசீர்வதிக்கும் நிமித்தம் இடம்பெற்ற சிறப்பு வழிப்பாட்டில் கலந்து கொண்டனர்.

அதற்கமைய யாழ் நாகதீப விகாரையில் இடம்பெற்ற சிறப்பு வழிப்பாட்டினை போல் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திலும் 07 ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி நகரில் உள்ள லும்பினி விகாரையிலும் ஆசிர்வாத மத வழிப்பாடுகள் இடம்பெற்றன.

லும்பினி விகாரையில் நடைபெற்ற ‘பிரித்’ பூஜை நிகழ்வில் கிளிநொச்சி, பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன, மாவட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இப் பூஜை நிகழ்வானது அனைத்து அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பௌத்த மத தேரர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. jordan Sneakers | adidas Yeezy Boost 350