Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2020 09:30:08 Hours

இராணுவத்தினரால் வீதிகள் புணரமைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55, 552 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரின் ஏற்பாட்டில் ஐய்யகச்சி சந்தியிலிருந்து கட்டிக்காடு வீதி வரையான 10 கிலோ மீற்றர் தூர வீதிகள் மீள் நிர்மானிக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் 23 ஆவது கெமுனு காலாட் படையணி, 12 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 40 படையினரது பங்களிப்புடன் இயந்திர வண்டிகளை உபயோகித்து நிர்மானிக்கப்பட்டன.

சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற மழை காரணமாக வீதிகள் சேதமடைந்து காணப்பட்டமையால் இந்த வீதியில் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு சிரம மாக காணப்பட்டன. இந்த வீதியால் தினசரி புகழ்பெற்ற வெற்றிலைகேனி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கோட்டேஹொட அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. Running sports | Nike, adidas, Converse & More