15th November 2019 22:11:25 Hours
முப்படைகளின் பிரதானியும் நாட்டின் ஜனாதிபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் விடைபெறும் நிகழ்வானது முப்படைகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் தலைமையில் ஹோட்டல் சங்ரில்லாவில் வியாழக் கிழமை (14) மாலை இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பாதுகாப்பு செயலார் பாதுகாப்பு பிரதானியவர்கள் இராணுவ கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதியகள் போன்றோர் கலந்து கொண்டதுடன் முப்படைகளின் அதிகாரிகள் அத்துடன் இப் பிரதானிகளின் மனைவிமாரான திருமதி சோனியா கோட்டேகொட திருமதி யமுனா விஜேகுணரத்தின மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் போன்றோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வின் போது அதிமேதகு ஜனாதிபதியவர்கள் தேசத்திற்காக அர்பணிப்புடன் சேவையாற்றிய படையினருக்கான விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து முப்படைகளை முன்னிலைப்படுத்தி அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணரத்தின அவர்கள் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் கடந்த நான்கு வருட காலப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கிய சேவையை முன்னிட்டு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன் உரையையும் நிகழ்த்தினார்.
மேலும் இதன் போது கருத்து தெரிவித்த அதிமேதகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள் முப்படையினரது சேவைக்கான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்ததுடன் அவர்களது எதிர்காலத்திற்கான பாராட்டுக்களையும் தெரிவித்தார்..
அத்துடன் இந் நிகழ்வில் படையினரால் அதிமேதகு ஜனாதிபதியவர்களின் விபரங்கள் மற்றும் பல விடயங்கள் உள்ளடக்கிய காணொலியானது இதன் போது திரையிடப்பட்டது. bridgemedia | Air Jordan Sneakers