Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2019 12:15:46 Hours

படையினர்களுக்கான தங்குமிட விடுதிகள் திறந்து வைப்பு

முல்லைத்தீவு நந்திக்கடலில் அமைந்துள்ள 591 ஆவது படைத் தலைமையக வளாகத்தினுள் படையினர்களின் தங்குமிட வசதிக்காக புதிய விடுதிகள் இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

இந்த நலன்புரி தங்குமிட கட்டிடங்கள் 591 படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் W.M.S.C.K வனசிங்க அவர்களது அழைப்பையேற்று 59 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் K.H.P.P பெர்ணாண்டோ அவர்களினால் ரிபன்கள் வெட்டி திறந்து வைக்கப்பட்டன.

விடுதிகளின் கட்டிட நிர்மான பணிகள் 591 ஆவது படைத் தலைமையக படையினர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கட்டிட திறப்பு நிகழ்வில் 591 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். அத்துடன் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேநீர் விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | Nike