26th October 2019 09:50:53 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் திருகோணமலையிலுள்ள 22 ஆவது படைப் பிரிவின் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்கள் வரவேற்று 2 ஆவது கஜபா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் தளபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
பின்னர் படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த கிழக்கு தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார். பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்டார்.
கிழக்கு தளபதி அதனை தொடர்ந்து 221, 222 மற்றும் 224 ஆவது படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டு கட்டளை தளபதிகளை சந்தித்து படையினரது சுபசாதனை மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
அத்துடன் இம் மாதம் (25) ஆம் திகதி திருகோணமலையிலுள்ள திருக்கோணோஸ்வரம் ஆலயத்திற்கும் சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
பின்பு திருகோணமலையிலுள்ள ஜயசுமனராமய விகாரைக்கு சென்று ரங்கிருல்லபத்த ராஜமஹாவிகாராதிபதியான அகுன்ஹல்ல ஶ்ரீ செல்லவிசுத்தி ஞானகீர்த்தி நாயக்க தேரையும் சந்தித்து அவரது ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் திருமலை மறை மாவட்டத்தின் ஆயர் வணக்கத்திற்குரிய நோயல் இமானுவெல் ஆண்டகை அவர்களையும் கிழக்கு தளபதி சந்தித்து உரையாடலையும் மேற்கொண்டார்.
மேலும் கிழக்கு பாதுகாப்பு தளபதி கிழக்கு மாகாண ஆளுனர் திரு ஷான் விஜயலால் மற்றும் திருமலை மாவட்ட செயலாளர் திரு என்.ஏ.ஏ புஸ்பகுமார அவர்களை சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டார். Sportswear free shipping | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp