27th October 2019 21:09:18 Hours
அறிவியல் நகரில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் பொறியியல் பீடத்தில் இளங்கலை பட்டதாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, கிளிநொச்சி படையினரால் சனிக்கிழமையன்று (26) ஆம் திகதி தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்த தானம் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கி கிளையின் ஒத்துழைப்புடன் இந்த இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ. பி. எஸ் டி சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய இடம்பெற்றன. Sports Shoes | New Releases Nike