Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2019 13:35:18 Hours

படையினரால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு

வட மத்திய மாகாணத்தின் நோயாளிகளின் நலன்கருதி அனுராதபுர பொது மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கமைய வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் படையினரால் இரத்தம் வழங்கும் நிகழ்வு (23) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த திட்டம் வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் ஏற்பாட்டில் மருத்துவமனையின் நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ள நிலையில் தேவையான இரத்த பற்றாக்குறையை கருத்திற் கொண்டு இந்த இரத்தம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டமானது 12 மணி நேரத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 300 க்கும் அதிகமான படையினர்கள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கினர்.

அதற்கமைய, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக மருத்துவமனை மற்றும் அனுராதபுர பொது மருத்துவமனை மருத்துவ குழுக்களின் உதவிகளுடன் மேற்கொள்ளப்பட்டது. short url link | Nike Off-White