Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2019 15:00:46 Hours

புதிய இராணுவ தலைமையகத்தில் தங்குமிடம் தேவைக்காக காணிகள் வழங்கி வைப்பு

இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில் நகர அபிவிருத்தி மேம்பாட்டு அதிகாரசபை (யுடிஏ) புதிய இராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான தங்குமிட குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்காக கொஸ்வத்த பத்தரமுல்ல பகுதியிலிருந்து 1.1 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ தங்குமிட வசதி விடுதி பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளரது முன்நிலையில் இந்த காணிப்பத்திரங்கள் இம் மாதம் (23) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி மேம்பாட்டு அதிகாரசபையின் காணிப் பணிப்பாளர் திரு கே எல் டப்ள்யூ பெரேரா, பிரதி காணிப் பணிப்பாளர் திருமதி நதீர திரிமாவிதான, மேலதிக காணிப் பணிப்பாளர் திருமதி நிலந்தி ரேணுகா போன்றோர் இராணுவ தளபதியை சந்தித்து இந்த பத்திரங்களை வழங்கி வைத்தனர். இச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதியினால் இந்த அதிகாரிகளுக்கு நினைவு பரிசும் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டன.

மேல் மாகாண அமைச்சர் கௌரவத்திற்குரிய பாடலி சம்பிக ரனவக அவர்களது பணிப்புரைக்கமைய இந்த காணிகள் தற்காலிகமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த காணிப்பத்திரங்கள் இராணுவ தளபதி பணிமனையில வைத்து இராணுவ தளபதிக்கு வழங்கி வைக்கும் சந்தர்ப்பத்தில் இராணுவ தங்குமிட வசதி விடுதி பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர மற்றும் அந்த பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் W.S.B நாயக்கரத்ன அவர்கள் இணைந்து கொண்டனர். latest Running | Nike Shoes