Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2019 18:14:57 Hours

213 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் விகாரையில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21, 213 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திவுல்வெவ கிரல்லகல ரஜமஹா விகாரையினுள் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிடமானது 213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியான கேர்ணல் K.A. N ரஷிக குமார அவர்களின் பூரன ஒத்துழைப்புடன் இந்த புதிய கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டன. இம் மாதம் 15 – 16 ஆம் திகதிகளில் பௌத்த ஆசிர்வாத வழிபாடுகளுடன் மஹா சங்க தேரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன. அத்துடன் இந்த விகாரையில் கடின பிங்கம பூஜைகளும் இடம்பெற்றன.

இந்த விகாரையில் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிடமானது 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பௌத்த பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Nike Sneakers | Nike Running