16th October 2019 17:46:56 Hours
இலங்கை இராணுவத்தினால் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் மரநடுகைத் திட்டம் தொடர்பாக ‘சிரஷ டோக்சோ’ எனும் பெயரில் இன்று (15) ஆம் திகதி காலை சிரஷ தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.
சிரஷ தொலைக்காட்சியில் 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் இராணுவ தளபதியின் போர்க்கள நினைவுகள், முன்னாள் ஐக்கிய நாட்டு தூதரகத்தில் பதவி வகித்த அனுபவங்களையும், இராணுவ வீரர்களுக்கான நலன்புரி சலுகைகள், இவரது பாடசாலை நினைவுகள் மற்றும் இராணுவ கெடற் விபரங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ‘துரு சிரஷ’ மரநடுகைத் திட்டம் தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இராணுவ தளபதி தனது கருத்துக்களில் ஏழு விடயங்களை மீண்டும் வலியுறுத்தினார், அதாவது தேசிய பாதுகாப்பு, தேசத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கத்திற்கான பங்களிப்பு, திறன்களை மேம்படுத்துதல், இராணுவ வீரர்களின் கல்வித் திட்டங்கள், அனைத்து அணிகளின் தொழில்முறை நடத்தை ஊக்குவித்தல், ஏற்பாடு ஓய்வூதியத்திற்கு முந்தைய காலங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு தொழில் பயிற்சி, அதிகாரிகள் மற்றும் பிற அணிகளுக்கான நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள இராணுவத்தை நவீனமயமாக்குதல் தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டன.
(இந்த வீடியோ காட்சிகளை டோக்சோ நிகழ்ச்சியில் காணலாம்) Sports brands | NIKE AIR HUARACHE