10th October 2019 19:22:37 Hours
காலி முகத்திடலில் கொண்டாடப்பட்ட இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தினத்தையடுத்து, அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தினால், விசேட முத்திரையானது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் முன்னிலையில் வியாழக் கிழமை(10); வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு ஹில்டன் பூல்சைட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தபால் மாஅதிபர் திரு ரஞ்ஜித் ஆரியரத்ன ,பிரதி தபால் மாஅதிபர் (நடவடிக்கை) திரு டிஏஆர்கே ரணசிங்க, மற்றும் அவருடைய ஊளியர்கள் கலந்துகொண்டு முத்திரையின் முதலாவது பிரதியினை உரையில் பொறித்ததோடு, உத்தியோகபூர்வமாக மக்களுக்கு வெளியிட்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் முதலாவது பொறிக்கப்பட்ட முத்திரை உரையினை பெற்றுக்கொண்டதோடு, அதனை பாதுகாப்பு அமைச்சின் பதில் பாதுகாப்பு செயலாளர் திரு அனுராத விஜயகோண் அவர்களிடம் கையளித்தார்.அடுத்ததாக இராணுவ வீரர்களை கௌரவிக்குமுகமாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜெரி சில்வா ஜெனரல் தயா ரத்நாயக்க, மற்றும் சில இராணுவ வீரர்கள் ஆகியோரை தபால் மாஅதிபரிடமிருந்து குறித்த முத்திரையை பெற்றுக்கொள்வதற்காக அழைப்புவிடுத்தார்.
மேலும், இராணுவ பதவிநிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். latest Running | NIKE AIR HUARACHE