07th October 2019 16:18:46 Hours
இலங்கைக்கான மாலைதீவு தூதரகத்தின் தூதுவரான மதிப்புக்குரிய ஓமர் அப்துல் ராஷக் அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (7) ஆம் திகதி சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறைகளை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர். பின்பு இருவர்களது சந்திப்பினை நினைவு படுத்தும் முகமாக இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியில் தூதுவர் அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
இச்சந்திப்பின் போது மாலைதீவு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் இஷ்மைல் நசீர் அவர்களும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Nike for Men