26th September 2019 10:23:34 Hours
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புதிய இளங்கலை ஆசிரியர்களுக்கு இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் பயிற்சிகள் இம் மாதம் 20 – 26 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த பயிற்சிகள்‘தலைமைத்துவம்’ மற்றும் ‘நேர்மறையான அணுகுமுறைகள்’ எனும் தொணிப்பொருளின் கீழ் இந்த புதிய ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.
1 (அ) பிரிவின் கீழ் கற்பித்தல் சேவையின் தரம் 3 ஆசிரியர்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அந்த ஆசிரியர்கள் அதன்படி 'தலைமைத்துவ தரங்களை மேம்படுத்துதல்', 'சமூக ஒழுக்கம்', 'திறன் மேம்பாடு', 'மன மேம்பாடு சவால்களுக்கு எதிராக 'மற்றும்' உடல் ஆரோக்கியம் 'போன்றவை. அந்த துறைகளுடன் இணைக்கப்பட்ட தத்துவார்த்த மற்றும் நடைமுறை அம்சங்களையும் அறியும் நோக்கத்துடன் இந்த பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பயிற்சிகள் இராணுவ பயிற்சி பணியகத்தின் தலைமையில் மின்னேரிய காலாட் பயிற்சி நிலையத்தில் (120) பேரும், பீரங்கிப்படைப் பயிற்சி பாடசாலை (215) பேரும், இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் (410) பேரும், கஜபா படையணி தலைமையகத்தில் (259) பேரும், கெலெத்தாவ படைக்கலச் சிறப்பணி பயிற்சி நிலையத்தில் (135) இளங்கலை ஆசிரியர்களும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Adidas footwear | UK Trainer News & Releases