26th September 2019 21:24:43 Hours
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, பதவிநிலை பிரதானியாக இருந்த சமயத்தில் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒன்றினைந்த தேசிய விமான நிறுவனமானது ‘ஶ்ரீ லங்கா எயார்லைன்ஷ்’ வெளிநாடுகளுக்குச் செல்லும் முப்படையினருக்கு இலவசமாக ஐந்து கிலோகிராம் பொருட்களை கொண்டு செல்வதற்கான வசதிகளை வழங்கி வைத்துள்ளன.
‘ஶ்ரீ லங்கா எயார்லைன்ஷ்’ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. ஜயந்த அபேசிங்க, இலங்கை மற்றும் இந்தியா பிராந்திய முகாமையாளர் திரு தீபால் பல்லேகங்கொட, அரச பயண முகாமையாளர் மற்றும் வியாபார நிறைவேற்று அதிகாரி திரு சாமர ஹெட்டியாரச்சி அவர்கள் இன்று பகல் (26) ஆம் திகதி இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது எயார்லைன்ஷ் அதிகாரிகள் இராணுவ தளபதியுடன் சலுகைகள் தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடினார். இந்த சலுகையானது இராணுவத்தினருக்கு தனிப்பட்ட விடுமுறை, பயிற்சிகள், மாநாடு மற்றும் செயலமர்வுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் சமயங்களில் வழங்கி வைக்கப்படும்.
வெளிநாட்டுப் பயிற்சிப் படிப்புகளுக்குச் செல்லும்போது, 30 கிலோ இலவசமாக அவர்களின் தனிப்பட்ட பொருட்களைத் தவிர, இராணுவ வீரர்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய பாகங்கள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலவச சலுகைகளை அதிகரிப்பதற்காக 'ஶ்ரீ லங்கா எயார்லைன்ஷ்’ நிறுவனத்திடத்திடம் 2019 ஆகஸ்ட் மாதம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
‘ஶ்ரீ லங்கா எயார்லைன்ஷ்’ நிறுவனமானது அதன்படி தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிற்கு பயிற்சிக்குச் செல்லும் அனைத்து முப்படையினருக்கு 2019 ஜூலை 30 முதல் 5 கிலோ எடை கொண்ட இலவச பொருட்களை கொண்டு செல்லக்கூடிய வசதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
இராணுவ தளபதியவர்கள் ஶ்ரீ லங்கா எயார்லைன்ஷ் நிறுவனத்தினர் வழங்கிய ஒத்துழைப்பிற்கு இந்த அதிகாரிகளுக்கு இச்சந்திப்பின் போது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். பின்னர் எயார்லைன்ஷ் நிறுவன அதிகாரிகளினால் இந்த சலுகை ஒப்பந்த பத்திரங்கள் இராணுவ தளபதிக்கு கையளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | NIKE