Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2019 20:14:03 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த உயரதிகாரிகள் இருவர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத்திலுள்ள மூத்த உயரதிகாரிகளான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு மற்றும் மேஜர் ஜெனரல் சன்ன குணவர்தன அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்று செல்வதன் நிமித்தம் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இரு இராணுவ மூத்த அதிகாரிகளுக்கும் இராணுவத்தில் அவர்கள் ஆற்றிய சேவைகளின் நிமித்தம் பாராட்டுக்களை தெரிவித்து அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் இரண்டு வருட காலமாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்து இம் மாதம் (14) ஆம் திகதி ஓய்வு பெற்றுச் செல்கின்றனர்.

விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன குணவர்தன அவர்கள் இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதியாக கடமை வகித்து ஓய்வுபெற்றுச் செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Nike Off-White