12th September 2019 21:00:36 Hours
இலங்கைக்கான துருக்கி தூதுவர் கௌவர துன்கா ஒச்சுஹடார் 12 ஆம் திகதி மதியம் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
மேலும் இச்சந்திப்பில் பல தசாப்த காலமாக காணப்படும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு இணக்கம் மற்றும் இராஜதந்திர உறவுகள் போன்றன கலந்துரையாடப்பட்டன.
அதனைத் தொடந்து துhதுவர் தனது மனப்பூர்வமான வாழ்துக்களை தளபதிக்கு தெரிவித்ததோடு தளபதியின் கட்டடளையின் கீழ் தொழில் முறைமை, நல்லிணக்கம் , தேசிய நிர்மாணம் ,சமாதானம் போன்ற விடயங்கள் சிறப்பாக இடம்பெறும் என தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.
இச்சந்திப்பின் இறுதியில் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் துருக்கி தூதுவர் அவர்களின் வருகைக்காக தனது நன்றியினை தெரிவித்ததோடு, நினைவு சின்னத்தினையும் வழங்கிவைத்தார். மேலும் இந்நிகழ்வில் துருக்கி தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் திருமதி நசான் டெனிஸ் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும். url clone | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov