Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2019 14:02:57 Hours

62 ஆவது படைப் பிரிவின் உதவியுடன் கணனி ஆய்வுகூட நிர்மான பணிகள் ஆரம்பம்

மணலாறு வலையத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கும் முல்லைத்தீவு பரணகம வெவ வித்தியாலயத்தில் கணனி ஆய்வுகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இம் மாதம் (4) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களது தலைமையில் இந்த கட்டிட நிர்மான பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் மேற்கொள்ளப்பட்டன.

கொமர்ஷல் வங்கியின் தலைமையகத்தின் நிதி அனுசரனையுடனும் 14 (தொ) இலேசாயுத காலாட் படையணியினரது பங்களிப்புடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

பாடசாலை நிர்வாகமும் அதிபரும், மாணவர்களும் இந்த கணனி ஆய்வு கூடம் நிர்மானிப்பதற்காக உதவிகளை வழங்கிய கொமர்ஷல் வங்கியினருக்கும் இராணுவத்தினருக்கும் இந்த நிகழ்வினூடாக தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். latest jordans | Nike