05th September 2019 20:40:21 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் முழங்காவில் பிள்ளையார் கோயில் வளாகம் மற்றும் கரியலானஹபடுவான் அந்தோனியர் கிறிஸ்த்தவ தேவாலயங்களில் ஆகஸ்ட் மாதம் 28 – 31 ஆம் திகதி வரை படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் 11 (தொ) கஜபா படையணி, 20 (தொ) விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 32 படை வீரர்களும், 16 சிவிலியன்களும் இணைந்து கொண்டனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்கள் பணிப்புரைக்கமைய இந்த சிரமதான பணிகள் படையினரது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. . spy offers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK