05th September 2019 20:23:15 Hours
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கெப்டன் அசோக் கோடிஷ்வர ராவ் அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (5) ஆம் திகதி சந்தித்தார்.
இருவர்களது இச்சந்திப்பின் போது இராணுவ உறவு முறைகளுக்கு அவதானத்தை செலுத்தி இரு நாடுகளுக்கு இடையிலான தங்கள் பரஸ்பர பயிற்சி தொகுதிகள் மற்றும் பிற பரிமாற்ற திட்டங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் எனும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இறுதியில் இவர்கள் இருவருக்கும் இடையில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இந்திய தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரவி சேகர் மிஷ்ரா அவர்களும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.short url link | Zapatillas de running Nike - Mujer