02nd September 2019 18:10:20 Hours
கிளிநொச்சியிலுள்ள மனித்தல்வை புனித செபஷ்டியான் கிறிஸ்தவ தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவானது ஆகஸ்ட் மாதம் 20 – 25 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இந்த திருவிழா காலங்களில் 66 ஆவது படைப் பிரிவினால் பாதுகாப்பு முழுமையாக வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவி மற்றும் பொலிஸாரினால் இந்த பாதுகாப்பு வழங்கி வைக்கப்பட்டன. இந்த திருவிழாவிற்கு 3000 பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த பாதுகாப்பு பணிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேர்ணல் மதுர விக்ரமரத்ன அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு பணிகளில் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 15 பீரங்கிப் படையணி, 5 பொறிமுறை காலாட் படையணி மற்றும் 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி ஈடுபட்டுக் கொண்டது. bridgemedia | Marki