27th August 2019 13:25:04 Hours
ரணவிரு எபரல் தையல் மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த கிரிக்கட் போட்டியானது இம் மாதம் (3) ஆம் திகதி இந்த நிலையத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்களது தலைமையில் கம்பஹா நகராட்சி மண்டப மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டிகள் இந்த நிலையத்திலுள்ள விஷேட தேவையுடைய படை வீரர்கள் மற்றும் மற்றைய படை வீரர்களைக் கொண்ட இருவெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் இடம்பெற்றது. ஆண்களுக்கான இறுதிச் சுற்றுப் போட்டியில் யக்கல அணியானது அலவ்வ அணியை வென்று சம்பியனாக திகழ்ந்தது. அதனைப் போல் பெண்கள் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அலவ்வ அணியானது யக்கல அணியை தோற்கடித்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
மூன்று அணி பிரிவினர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கம்பஹா மாவட்ட நகராட்சி மன்றத்தின் நகரபிதா திரு எரங்க சேனாநாயக, ரணவிரு எபரல் மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்கள் வருகை தந்தனர். இவர்களை இந்த நிலையத்தின் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் கபில ரணவீர அவர்கள் வரவேற்றார்.
இந்த போட்டிகளில் பங்கேற்றி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு பிரதம அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டது. இந்த போட்டியானது இங்கு பணிபுரியும் இராணுவத்தினரது மனத்தைரியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன. Nike Sneakers | nike air max 95 obsidian university blue book list