27th August 2019 14:20:02 Hours
அம்பேபுஸ்ஸவிலுள்ள இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் நாட்டிற்காக உயிர் நீத்த சிங்கப் படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 24 – 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இம் மாதம் 24 ஆம் திகதி பௌத்த சமய அனுஷ்டான பிரித் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதி பதவிநிலை பிரதானியும் சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்தார். இவரை சிங்கப் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லாவெல அவர்கள் வரவேற்றார்.
27 ஆவது தடைவையாக இடம்பெற்ற இந்த சிங்கப் படையணியின் ஞாபகார்த்த நிகழ்வில் 144 இராணுவ அதிகாரிகள் மற்றும் 3720 படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து சமய தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் , படை வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் உறவினர்களும் பங்கேற்றிக் கொண்டனர். Running Sneakers | jordan Release Dates