Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2019 13:59:08 Hours

ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் விசேட படையணியினால் கௌரவிப்பு

38 வருட கால இராணுவ சேவையில் இருந்து தற்பொழுது ஓய்வு பெற்றுச் சென்ற 22ஆவது இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது கடந்த திங்கட் கிழமை 26 ஆம் திகதி நாவுலயில் உள்ள விசேட படையணி தலைமையத்தில் இடம் பெற்றன.

அதனைத் தொடந்து இராணுவத் தளபதி (ஓய்வு) ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கான இராணுவ மரியாதையானது படையிணரால் வழங்கப்பட்டதையடுத்து விசேட படையணியின் சிரேஷ்ட மன்ற உறுப்பினரான பிரிகேடியர் செனரத் யாப்பா அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

மேலும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ரண பரஷூவ ( ஹட்ச்சட்) மற்றும் படையணி ரண பரஷூவ சின்னங்கள் வழங்கப்பட்ட படையணியினால் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன. அதனைத் தொடந்து 22ஆவது இராணுவ தளபதி படையினர் மத்தியில் உறையாற்றினார்.

அதனைத் தொடந்து விசேட படையணித் தலைமையகத்திலுள்ள விசேட படையணி வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரசஞ்லியானது பிரதான அதிதியினால் வைக்கப்பட்டது. பின்னர் அவர் கோப்ரல் கழகத்தில் அனைத்து படையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்

மேலும் அவர் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக இரவு உணவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதோடு அவருக்கான விஷேட ஞாபக சின்னமும் வழங்கப்பட்டன. இரவு உணவு விருந்துபசாரத்தின் போது இராணுவத் தளபதி (ஓய்வு)ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் ரண பரஷூவ ( ஹட்ச்சட்) மற்றும் படையணி ரண பரஷூவிற்கு பதிலாக விசேட படையணில் உள்ள 4கட்டளை அதிகாரிகளுக்கான நற்சான்றிதழ்களை வழங்கினார்

மேலும் இவ் வைபவத்தின் போது விசேட படையணியின் ஸ்தாபகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டிஆராச்சி ஓய்வு பெற்ற கேணல் டபல்யு எம் ஜே ஐ. பெனாண்டோ சிரேஷ்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய பாரியார்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக விடைபெற்றுச் செல்லும் இராணுவ தளபதியை சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீரர்கள் படையணி தலைமையகத்துக்கு முன்பாக வைத்து வழியனுப்பி வைத்தனர்.Running Sneakers Store | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf