Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2019 13:03:04 Hours

இராணுவ தளபதி ஶ்ரீ மஹா போதிக்கு விஜயம்

அநுராதபுரத்திலுள்ள ஜய ஶ்ரீ மஹா போதிக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (25) ஆம் திகதி சென்று ஆசிர்வாத பூஜைகளிலும் கலந்து கொண்டார்.

இராணுவ தளபதியுடன் அவரது பாரியாரும், இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா சேனாநாயக அவர்களும் இந்த பௌத்த தரிசனத்திற்காக சென்றிருந்தார். அச்சந்தர்ப்பத்தில் மதிப்புக்குரிய கலாநிதி பல்லேகம ஶ்ரீநிவாஷபிந்தன நாயக்க தேரர் அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது நாயக்க தேரர் அவர்கள் இராணுவத் தளபதியின் புதிய நியமனம் குறித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு கலாநிதி பல்லேகம ஶ்ரீநிவாஷபிந்தன நாயக்க தேரர் அவர்களினால் இராணுவ தளபதிக்கு தேசத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து , தனது கடமைகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அச்சந்தர்ப்பத்தில் இராணுவ தளபதி தமது நாட்டின் பாதுகாப்புக்காக தன்னை 24 மணி நேரமும் அர்ப்பணித்து நாட்டின் அனைத்து மக்களது நலன் நிமித்தம் எனது சேவையை சிறப்பாக மேற்கொள்வதாக தேரர் அவர்களுக்கு உறுதியளித்தார்.

இந்த போதிக்கு மல்லிகை பூக்களின் தட்டுகளை ஏந்திய வண்ணம் இராணுவ தளபதி சென்று தரிசனம் செய்தார். பின்னர் அந்த விஹாரையிலிருந்த தேரர்களுக்கு இராணுவ தளபதியின் கரங்களினால் அன்னதானங்களும் பரிமாரி வைக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் கஜபா படையணியின் மத்திய கட்டளை தளபதி, படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். short url link | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ